சரக்கு, பெண்களோடு தனிமை… மட்டன், சிக்கன் என வகைவகையான சாப்பாடு… பேங்க் கேங்கின் அட்டூழியம்… திடுக்கிடும் வாக்குமூலம்…!!

By Soundarya on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது பலவிதமான வழிகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் வங்கி வாசலில் காத்திருந்து அதிக பணம் எடுத்து வரும் வாடிக்கையாளர்களை குறி வைத்து பணத்தை திருடுவது தான் இவர்களின் வேலை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்துள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஊரகவளர்ச்சி துறை அலுவலர் நகையை அடகு வைத்துவிட்டு 1.4 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். பிறகு வங்கி வாசலில் வண்டியை  நிறுத்து வண்டி பெட்டிக்குள்  பணத்தை வைத்துவிட்டு மனைவியோடு அருகில் உள்ள கடைக்கு சென்று டீ குடிக்க சென்றுள்ளார். சில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஒரு இளைஞர் பலமுறை வந்து சம்பந்தப்பட்ட ஸ்கூட்டியை பார்த்து செல்வது தெரிந்தது. அதன் அடிப்படையில் அந்த நபர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மண்டை என்ற செந்தில் குமார் என்பதும் தற்போது திருச்சியில் தங்கியிருந்ததும், திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்த சில இளைஞர்களோடு சேர்ந்து வங்கி வாசலில் காத்திருந்து பணம் திருடுவதாகவும் அவர் மீது ஏற்கனவே 10 வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர் .இதனை அடுத்து அவரையும் அவருடைய கூட்டாளி ராஜ்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளார்.

   

மேலும் இருவரையும் கைது செய்தார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில், மண்டை செந்தில் நோட்டம் பார்ப்பார். ஸ்கூட்டர் இருக்கையில் பணம் வைப்பதை பார்த்ததும் எங்களுக்கு சிக்னல் கொடுப்பார் நாங்கள் வண்டி சுற்றி நின்று பெட்டியை திறந்து பணத்தை எடுப்போம். பணம் கைக்கு வந்ததும் பைக்குகளில் வேளாங்கண்ணி போன்ற ஊர்களுக்கு சென்று குடித்துவிட்டு மட்டன், சிக்கன், மீன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு பெண்களோடு தனிமையில் இருந்து விட்டு பணம் முடிந்ததும் அடுத்த இடத்திற்கு சென்று விடுவோம் என்று கூறியுள்ளார்கள்.