சூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்கள் வாங்கிய புகாரில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். ஆப்பரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் மட்டும் முப்பது இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் விடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
