திடீர் அறிவிப்பு..! ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய ஷ்ரேயஸ்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

By Soundarya on புரட்டாதி 23, 2025

Spread the love

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியா ஏ அணி தலைமை மாற்றத்துடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டத்தில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், செப்டம்பர் 23 ஆம் தேதி லக்னோவில் தொடங்கும் நான்கு நாள் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். லக்னோவை விட்டு வெளியேறி மும்பைக்குத் திரும்புவதற்கான ஷ்ரேயாஸ் ஐயரின் திடீர் முடிவிற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக முதல் போட்டியில் ஐயரின் துணைத் தலைவராகப் பணியாற்றிய விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரெல் கேப்டன் பதவியை ஏற்க உள்ளார்.