கனவு நனவாண 10 நாட்களில் இப்படியா?… இளம் ஆசிரியருக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 23, 2025

Spread the love

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனம் மூலமாக பணி நியமனம் பெற்றவர்கள் பெரும் உற்சாகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால் அதனை சோகமாக்கும் விதமாக விழுப்புரத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 2,715 ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க விழுப்புரம், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த சில ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் காரில் வந்திருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டனர். விழுப்புரம் அய்யூர்அகரம் அருகே மேம்பால பணிகள் காரணமாக மாற்று வழியில் சென்ற கார் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தால் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

   

இந்த விபத்தில் ஆசிரியை சிவரஞ்சனி மற்றும் சாகுல் அமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பணி நியமனம் கிடைத்த வெறும் 10 நாட்களே ஆன நிலையில் இளம் ஆசிரியை சிவரஞ்சனியின் மரணம் கல்வி உலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.