ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை செய்த செங்கோட்டையன், நள்ளிரவு 12 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நீலகிரியில் இன்று நடக்கும் பரப்புரையில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கார் மூலமாக கோபி, சத்தியமங்கலம் வழியாக எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார். கோபி பஸ் ஸ்டாண்டில் காலை 7 மணிக்கு அவரை அதிமுகவினர் வரவேற்கின்றனர். இதை தவிர்ப்பதற்காகவே செங்கோட்டையன் சென்னைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது
