தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் 63 சீட், 2016 ஆம் ஆண்டு 41 சீட் , 2021 தேர்தலில் 25 சீட்டு என ஒவ்வொரு தேர்தலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும் சீட் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதால் கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை சீட் கொடுத்தாலும் 15 தான் வெற்றி பெறுவார்கள் என்ற மனநிலையில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உலகுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
