மக்களே குட் நியூஸ்..! ரூ.1,20,000 கடன் வழங்குகிறது தமிழக அரசு… யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா..?

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழ்நாடு அரசானது ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களை பயனடைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் எருமை உட்பட 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக 7% வட்டி விகிதத்தில் 1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுவதாக  தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 கடன் வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்பித்தால், குடும்பத்தில் ஒருவருக்கு கடன் வழங்கப்படும்.