கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தனர். இந்த நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பேருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோவை பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆணைகட்டிக்கு செல்ல பேருந்து இன்று பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. உடனே மக்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது ஓட்டுநரும் நடத்துனரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் அரசு உத்தியோகம், உணவு இடைவேளை, ஒரு மணி நேரம் தூக்கம் என்று கேலி செய்து அவர்களை கண்டித்துள்ளனர். மக்கள் தொடர்ந்து சத்தம் போட்டதால் ஓட்டுநரும் நடத்துனரும் கண்விழித்து மக்களை உள்ளே வர அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
