காலில் புண்ணிற்காக சிகிச்சைக்கு சென்ற பெண் திடீர் மரணம்… தென்காசியில் பரபரப்பு..!!

By Soundarya on புரட்டாதி 14, 2025

Spread the love

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால் புண்ணிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார் .தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அனுமதி இன்றி நடத்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள். பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழ் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து. இவருடைய  மனைவி சுப்பம்மாள் (67). ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் டாக்டர் சரவணகுமார் என்பவர் அவருக்கு சிகிச்சை அளித்தார் .காலில் உள்ள புண்ணை சுத்தம் செய்து சிகிச்சை செய்தபோது திடீரென்று சுப்பம்மாள் இறந்துள்ளார். இதனை அறிந்து அவருடைய உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனையடுத்து தனியாக மருத்துவமனை தொடங்குவதற்கும் மருந்தகம் வைப்பதற்கும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தெரிய வந்ததால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.