கடனை முறையாக திருப்பி செலுத்த தவறுபவர்களின் செல்போன் இயக்கத்தை முடக்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை கடனில் வாங்கி வருகிறார்கள். ஆனால், பலரும் வாங்கிய அந்த கடனை திருப்பி கட்டாததால் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனிநபர் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கவும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
