திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பிடி வாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
