திருவள்ளுவர் மாவட்டம் அரியத்தூர் கிராமத்தில் காட்டுப் பகுதிக்கு கூலித்தொழிலாளர் ஒருவர் மரம் வெட்ட சென்றுள்ளார். துர்நாற்றம் வீசியதை கண்டு புதரில் எட்டிப் பார்த்தபோது மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் உடலை உறுதி செய்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எலும்பு கூடுகளை எடுத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
எலும்புக்கூடு பக்கத்தில் நீளமான முடி மற்றும் மணிபர்ஸ், செல்போன் என அனைத்தும் எரிந்த நிலையில் கிடந்துள்ளன. பெண்ணாக இருக்கலாம் என்று போலீசார் கணிக்கின்றனர். உடல்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யார் அந்தப் பெண், கொலை செய்து எடுத்துள்ளார்களா பற்றி அனைத்தையும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. காட்டுப்பகுதிக்கு வரும் வழியில் உள்ள கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர். காட்டுக்குள் இருந்த மண்டை ஓடு மட்டும் எலும்புக்கூடை கண்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
