தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போல கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை அந்த மாநிலத்து மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். கேரளாவில் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதன்படி திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஓணம் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மேடையில் நடனமாடி கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓணம் பண்டிகையின் கொண்டாட்டத்தின் போது துணை நூலகர் ஜூனைஸ்(46) நடனமாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
