பொதுவாகவே ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல மாற்றங்கள் அவனுக்கு வருவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 1 இன்று முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
கிரெடிட் கார்டு:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தன்னுடைய கிரெடிட் கார்ட் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் 1 இன்று முதல் டிஜிட்டல் கேமிங் பிளாட்பாரங்கள், சில வணிகர்கள் மற்றும் அரசாங்க பரிவர்த்தனைகளுக்கு செய்யப்படும் செலவுகளுக்கு ரிவார்டு பாயிண்ட் வழங்கப்படாது.
வெள்ளி நகை ஹால்மார்க்:
வெள்ளி நகைகளின் தூய்மை குறித்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. தொடக்கத்தில் இது விருப்பத்திற்குரியதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பும் ஹால்மார்க் நகை வாங்கலாம் அல்லது சாதாரண நகை வாங்கலாம்.
சிலிண்டர் விலை:
மாதத்தின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வடிவ பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்து ரூ.1,738 விற்பனை செய்யப்படுகிறது.
அஞ்சலக சேவை:
அஞ்சலகத்தில் முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட உள்ளது. அதாவது இன்று முதல் பதிவு அஞ்சல் தனியாக இல்லாமல் ஸ்பீடு போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பும் பதிவுகள் அனைத்தும் ஸ்பீடு போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்பப்படும். தனி சேவை என பதிவு அஞ்சல் இனி கிடையாது.
வருமான வரி தாக்கல்:
வருமான வரித்துறை இந்த முறை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 30 இல் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அபராத நோட்டீஸ் வரக்கூடும்.
ஓய்வூதிய திட்டம்;
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
