ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை வழங்கக்கோரி காங்கிரஸ் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
