சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஓராண்டு முதல் நிலை இதழியல் படிப்பை இங்கு படிக்கலாம். இதன்மூலம் தமிழ்நாட்டில் பல திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
