மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகளை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்ன ஹை கோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மாநாட்டுத் திடலில் சில மணி நேரங்களுக்கு முன்பு 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
