2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் நாதக தலைவர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில் இந்த அதிரடி உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இவர் மீது பாலியல் புகார், அனுமதியின்றி பேரணி, IPS அதிகாரிக்கு எதிரான அவதூறு என பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில், தற்போது சீமானுக்கு இந்த வழக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
