விழுப்புரம் மாவட்டத்தில், சீமான் தலைமையில், கொனேரிகொன் கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், த.வெ.க தொண்டர்களிடம் கொள்கை என்னவென்று கேட்டால், “தளபதி தளபதி” என்று கத்தினர். அது என் காதில் “தலைவிதி தலைவிதி” என்று கேட்கிறது. சரி எதுக்கு நீங்க வந்தீங்க என்று கேட்டால், ” TVK TVK” என்று கூச்சலிட்டனர். “டீ விற்பதற்கு இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க”….புலி வேட்டைக்கு செல்லும் போது குறுக்கே அணில்கள் ஓடுகின்றன.
ஓரமாய் போய் விளையாடு அணிலே, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடினால், புலிக்கு என்ன மரியாதை? என்று கிண்டலாக பேசினார். நெட்டிசன்கள், விஜய் ரசிகர்களை அணில் என கிண்டலடித்து வரும் நிலையில், “த.வெ.க தொண்டர்கள் அணில் ” என்ற சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
