கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2.13 கோடி சொத்து சேர்த்ததாக DVAC வழக்கு பதிந்தது. இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த HC, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக SC இல் அமைச்சர் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன் தகவல்கள், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், இது அவருக்கு பயங்கர நெருக்கடியாக மாறியுள்ளது. இந்நிலையில் இதேபோல ரெய்டில் இன்னும் பல அமைச்சர்கள் சிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தென் பகுதியில் இந்த ரெய்டு ஒரு புயலை கிளப்பும் என்று பேசப்படுகிறது. அதாவது, அமைச்சர்கள் மூர்த்தி(மதுரை), கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் (விருதுநகர்), பெரியகருப்பன் (சிவகங்கை) ஆகியோர் இந்த பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ரெய்டு தி.மலையில் என எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் வேலுவும் பட்டியலில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
