பெண்களே நீங்களும் தொழிலதிபராகலாம்… தமிழக அரசு வழங்கும் ரூ.25 லட்சம் கடன்… எப்படி பயன்பெறுவது..?

By Srimathi on ஆவணி 17, 2025

Spread the love

பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பல கடன் உதவிகளை வழங்கிவருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர் மற்றும் குழுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலான கடன் உதவியை, பொருளாதார மேம்பாட்டு கழகம்  வழங்கிவருகிறது.

தனிநபர் திட்டத்தின் கீழ், விவசாயம், வணிகம், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்களுக்கு ரூ. 25 லட்சம் கடனுதவி வழங்கப்படும். ரூ. 1.25 கீழ் 7 %  வட்டி விகிதமும், ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 8% வட்டி விகிதமும் விதித்துள்ளது. கடனை திரும்ப செலுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை, கால அவகாசம் விதிக்கப்படும். சுய உதவி குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக  ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுவதோடு, 7 % வட்டி விகிதம் நிர்ணயத்துள்ளது.

   

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, 1 கறவை மாட்டிற்கு ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு  7 % வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் காலம் 3  ஆண்டுகள்.

   

கடனுதவி பெற தகுதிகள் :

 
  • ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வயது – 18 முதல் 60 குள்
  • விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்

ஆவணங்கள் :

  • ஆதார் அட்டை
  •  வருமான சான்றிதழ்
  • பிறப்பிட சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • இருப்பிட சான்றிதழ்
  • திட்ட அறிக்கை
  • வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்
  • ஓட்டுநர் உரிமம்

விண்ணப்பிக்கும் முறை :

  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
  • www.tabcedco.tngov.in என்ற  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துவிண்ணப்பிக்கலாம்.