6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் NCERT நாட்டு பிரிவினை பற்றிய புது தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், பிரிவினை கலவரங்களுக்கு ஜின்னா, காங்., மவுண்ட்பேட்டன் ஆகிய மூவரும் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டை பிரிக்க வேண்டும் என்று 1938 ஆம் வருடம் ஹிந்து மஹாசபா தான் முதலில் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பொய் தகவலை கூறும் இந்த புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றும் சாடியுள்ளது.
