பாமகவில் ராமதாஸிற்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய பலத்தை கட்சியில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்றும் அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பயங்கரமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு பாமக செய்தி தொடர்பாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சி விதி 13 படி பொதுக்குழு, செயற்குழுவுக்கு கட்சி நிறுவனர் ஒப்புதல் தர வேண்டும். அவரின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக அவரின் பதவி காலத்தை நீட்டித்துள்ளார். அன்புமணியிடம் விளக்கம் கூறி தேர்தல் ஆணையம் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
