“இது உங்கள் கடமை” தமிழகம் முழுவதும் உடனே இதை அகற்றுங்க… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on ஆவணி 12, 2025

Spread the love

தமிழ்நாடு முழுவதும் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலைகளில் இருக்கும் பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறையின் கடமை என்றும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.