எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பத்து மீறிய இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தது தெரியவந்துள்ளது. இலங்கை பருத்தித் துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்த நிலையில் இரவோடு இரவாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
