இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணிப்பதால் அவர்களின் பெரும்பாலானோருக்கு ரயில்வேயின் முக்கிய விதிகள் தெரிவதில்லை. டிக்கெட் இருந்தும் பலரும் ரயிலை தவற விடும்போது தங்கள் டிக்கெட் இப்போது பயனற்றது என நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு ரயில் டிக்கெட்டை வாங்கி விட்டு ஒருவேளை ரயிலை தவற விட்டால் வருத்தப்பட்டு டிக்கெட்டை தூக்கி எறிய வேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்யப்படாத அல்லது பொது பெட்டியை வாங்கி இருந்தால் ரயில்வே விதிகளின்படி உங்களுடைய டிக்கெட் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
அதே டிக்கெட் உடன் செல்லுபடி ஆகும் காலத்திற்குள் வேறு எந்த ரயிலின் பொதுப்பெட்டியிலும் நீங்கள் பயணிக்க முடியும். குறுகிய தூர டிக்கெட்டுகளுக்கு 3 மணி நேரமும், நீண்ட தூர டிக்கெட்டுகளுக்கு 24 மணி நேரமும் இந்த பலன் கிடைக்கும். இருந்தாலும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்டால் உங்கள் டிக்கெட் பயனற்றதாகி விடாது. இதுபோன்ற சூழலில் TDR ஐ அதாவது டிக்கெட் டெபாசிட் ரசிதை தாக்கல் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திடம் உங்களுடைய டிக்கெட்டை திரும்ப பெற கோரலாம்.
இதற்காக ரயில் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் TDR ஐ ஆன்லைனில் நிரப்ப வேண்டும். IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் இந்த செயல்முறையை நீங்கள் முடித்து விடலாம். சரியான காலகெடுவுக்குள் TDR தாக்கல் செய்தால் ரயில்வே உங்களுடைய பணத்தை திருப்பித் தரும். பொது டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேசமயம் உங்கள் கவுண்டரில் இருந்து டிக்கெட் வாங்கி இருந்தாலும் நீங்கள் அங்கு சென்று TDR தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
