கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே ஜல்லி கற்கள் , எம்சாண்ட் கலவையை டிப்பர் லாரி ஒன்று ஏற்றி சென்றுள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வெப்பத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் உட்பட இரண்டு பேர் மீது அந்த கலவையானது சரிந்து விழுந்ததில் அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
