தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்க கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு செலவுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு சுங்க கட்டணம் ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்படியான நிலையில் கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள் இனிமேல் சுங்கச்சாவடிகளில் அதிகம் செலவிட வேண்டாம். 3000 ரூபாய் செலுத்தி வருடாந்திர பயண அட்டையை பெறும் திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த அட்டை மூலம் ஓராண்டு அல்லது 200 முறை கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். ஒருமுறை செல்லவே 445 சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
