sd

தம்பதிகளிடையே அதிகரிக்கும் Sleep Divorce…. இது புதுசா இருக்கே…

By admin on தை 5, 2025

Spread the love

திருமணம் என்பது ஆரோக்கியமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்பட்டது 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் தான். அப்போதுதான் பெரும்பாலான அரேஞ்ச் மேரேஜ்கள் நடந்தது. எப்போது 2k கிட்ஸ் டீனேஜ் பருவத்தை அடைந்தார்களோ அப்பொழுதே திருமணத்திற்கான மதிப்பும் குறைந்துவிட்டது.

   

இன்றைய இளம் தலைமுறையினர் திருமணத்தை ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை. இப்போது அனைத்துமே காதல் திருமணங்கள் தான் நடைபெறுகிறது. அப்படி நடந்தாலுமே எளிதில் சின்ன விஷயத்திற்கு கூட பொறுத்துக் கொள்ளாமல் டைவர்ஸ் என்பதை அறிவித்து விடுகிறார்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். அட்ஜஸ்ட் செய்து வாழும் தன்மை அவனிடம் குறைவாகவே இருக்கிறது. அதையும் தாண்டி தற்போது நம் சமூகம் கேடாக செல்லக்கூடியது என்னவென்றால் பெற்றோர்களுக்கே தெரியாமல் Living Together ல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

   

விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தம்பதிகளிடையே Sleep Divorce மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது என்ன Sleep Divorce? இது எதனால் நடைபெறுகிறது போன்ற விவரங்களை பற்றி இனி காண்போம்.

 

Sleep Divorce என்பது சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்றது அல்ல. தம்பதிகள் ஒரே வீட்டில் தனித்தனியா அறையில் படுத்து தூங்குவது தான் Sleep Divorce எனப்படும். இப்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறார்கள். வேலைப்பளு காரணமாக அவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு நேரம் குறைவாக இருக்கலாம். அதனால் இரவு நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக ஒருத்தருக்கு ஒருத்தர் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் தனித்தனியா அறையில் படுத்து தூங்குகிறார்கள்.

ஒரு சிலருக்கு மொபைல் பார்க்கும் பழக்கம் இருக்கலாம் உடல் உபாதைகள் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தங்களது பார்ட்னர்கள் எந்தவித தொந்தரவுக்கும் உள்ளாக கூடாது என்பதற்காக தனி அறையை தேர்ந்தெடுத்து தூங்குகிறார்கள். மேலும் வேலைப்பளு காரணமாக பிரஷர் இருப்பவர்களுக்கு இந்த மாதிரி தனிமையில் தூங்கும் போது நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் இந்த Sleep Divorce என்பது ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருந்தாலும் இரவு நேரத்தில் கணவன் மனைவி சந்திக்கும்போது அன்றைய நிகழ்வுகளை மம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி தூங்கும்போது அவர்களிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இதுலயுமே பட்டும் படாமல் தனித்தனி அறையில் தேர்ந்தெடுத்து தூங்கும்போது அவர்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும். இதுவே நாளடைவில் சட்ட ரீதியான விவாகரத்துக்கும் வழி வகுக்கும் என்று கூறுகிறார்கள்.