பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை பூர்ணிமா போட்டோ சூட் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. Youtube நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா, நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பூர்ணிமா பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கமலஹாசனிடம் பல திட்டுகளையும் வாங்கி இருந்தார். கிட்டத்தட்ட 100 நாட்கள் நெருங்கிய போதிலும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.பிக் பாஸ் சீசனிலேயே அதிக பணத்தோடு வெளியேறிய போட்டியாளர் இவர்தான். 16 லட்சம் தொகையுடன் வெளியேறிய இவர் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இவர் நடித்த அன்னபூரணி திரைப்படமும் வெளியானது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த இவர் சிவப்பி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல பாராட்டுகளையும் பெற்று இருந்தது.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் பூர்ணிமா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதின் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதை பார்த்த இணையவாசிகளோ இவங்களுக்கு சாய் பல்லவினு நினைப்பு என்று கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.
View this post on Instagram
