வறுமையால் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய தீப்பெட்டி கணேசன்.. நெஞ்சு வலியால் அனாதையாக இறந்து கிடந்த சோகம்..!

By Nanthini on கார்த்திகை 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தான் தீப்பெட்டி கணேசன். இவர் தமிழில் அங்காடி தெரு, ரேணிகுண்டா, நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகராக இருந்தார். தமிழில் படங்கள் சிலவற்றில் நடித்திருந்த போதும் தீப்பெட்டி கணேசனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வறுமை நிலையில் இருந்த அவருடைய வாழ்க்கை கொரோனா பொதுமொடக்க கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் மிகவும் மோசம் அடைந்தது. இதனால் தனக்குத் தெரிந்த புரோட்டா மாஸ்டர் தொழிலில் தீப்பெட்டி கணேசன் ஈடுபட்டு வந்தார்.

தீப்பெட்டி கணேசன் மரணம் - வறுமையால் புரோட்டா மாஸ்டராக பணியாற்றிய தமிழ்  சினிமா கலைஞன் - BBC News தமிழ்

   

இதனைத் தவிர சிறு சிறு தொழில்களிலும் கவனம் செலுத்தினார். இவருடைய நிலையை அறிந்து திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன், நடிகர் விஷால் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்டோர் பலரும் அவருக்கு உதவி செய்தனர். நடிகர் விஷால் சார்பில் அவரது குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான் கூட அப்போது அனுப்பி வைக்கப்பட்டது. தீப்பெட்டி கணேசனின் நிஜ பெயர் கார்த்திக். அந்த பெயரை சொல்லி தன்னை அழைத்தவர் நடிகர் அஜித் மட்டும் தான் என ஷூட்டிங்கில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூட தீப்பெட்டி கணேசன் பகிர்ந்து இருந்தார்.

   

உடல்நலக்குறைவால் பிரபல நடிகர் மரணம்…சோகத்தில் திரையுலகம்..! | Famous actor  theepetti Ganesan dies due to ill health

 

தன் மீது அவ்வளவு பாசம் கொண்ட அஜித்தை நேரில் பார்த்து அவரிடம் உதவி கேட்க பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை. இதனை தொடர்ந்து தீப்பெட்டி கணேசனை தொடர்பு கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது குழந்தைகளின் ஒரு வருட படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி இருந்தார். இப்படியான நிலையில் வறுமை வாட்டி வதைக்க நெஞ்சுவலி ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனாதையாக இறந்து கிடந்தால் தீப்பெட்டி கணேசன். இவருடைய மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.