தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் கடந்த 1988 ஆம் ஆண்டு சரி காய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராசன். சரிகா கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கமல் நடிப்பில் கடந்து 2001 ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். அந்த திரைப்படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிந்து விட்டது. 2004 ஆம் ஆண்டு சரிகாவுடன் உறவை கமல்ஹாசன் முடித்துக் கொண்டார். கமல்ஹாசனை பிரிந்த சரிகா தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். மகள்கள் மட்டும் கமல்ஹாசன் உடன் வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பழைய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனை பிரிந்த போது நடந்த விஷயங்கள் பற்றி சரிகா பகிர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, நானும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்து பிரிந்தோம். நான் கமல்ஹாசனை பிரிந்து அவருடைய வீட்டை விட்டு வெளியேறும்போது என்னிடம் வெறும் 60 ரூபாய் மட்டுமே இருந்தது. கமலை பிரிந்ததும் நான் நடுரோட்டுக்கு வந்து விட்டேன்.

அப்படி ஒரு சூழலில் நான் வெறும் 60 பணத்தையும் என்னுடைய காரையும் வைத்துக்கொண்டு நண்பரின் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு இரவில் நான் என்னுடைய காரிலேயே வந்து தூங்கினேன். அந்த நாட்களை என்னால் எப்போதும் மறக்க முடியாது என்று சரிகா கூறியுள்ளார்.
