ஊடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்தவர் தான் திவ்யா துரைசாமி. ஆரம்பத்தில் பல ஊடகங்களில் வேலை செய்தார். ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக மாறிய இவ்வாறு சில வருடங்கள் அந்த வேலையில் இருந்தார்.

பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்ட நிலையில் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சில குறும்படங்களில் நடித்து வந்தார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு மதில் மற்றும் குற்றம் குற்றமே ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட திவ்யா படிப்படியாக முன்னேறினார். சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகி வேடம் இவருக்கு கிடைத்தது. ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. தற்போது இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

எப்படியாவது சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது சேலையில் சமந்தா லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

