Categories: சினிமா

படத்தின் கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்.. இயக்குனர் பிரேம் இயக்கும் அடுத்த படம் இதுதானா.?

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 96. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து கௌரி கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

 

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர் பிரேம்குமார் திட்டமிட்டுள்ளார். ஆனால் முதல் பாகத்தைப் போல இந்த திரைப்படம் ஒரு காதல் கதையாக இருக்காது என்று அவர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கதையை கேட்டு அடுத்த நாளில் இயக்குனரை வரவழைத்து அவருக்கு 5 பவுன் தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு கதையை இதுவரை கேட்டதே கிடையாது என்றும் இந்த திரைப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் 96 திரைப்படம் மட்டுமல்லாமல் ஜானு என்ற தெலுங்கு திரைப்படத்தையும், மெய்யழகன் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.

இறுதியாக கார்த்தியை வைத்து இவர் இயக்கிய மெய்யழகன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற விட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே விரைவில் 96 படத்தில் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்தில் நடிக்க உள்ளாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago