Categories: CINEMA

2400 கோடி மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகர் RK.சுரேஷ்.. சென்னை ஏர்போர்ட்டில் லாக் செய்த அதிகாரிகள்.. சூடுபிடிக்கும் விவகாரம்..

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் 2348 கோடி பண மோசடி வழக்கில் சிக்கி தற்பொழுது தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்தனர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அப்படி செய்த விசாரணையில் தற்போது நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவரை விசாரிக்க போலீசார் முயன்றபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது.  இந்நிலையில்  இந்த பணமோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷூக்கும் தொடர்புள்ளதாக கூறி அவருக்கு போலீஸார் சம்மன் பிறப்பித்திருந்தனர். அவர் தனது மனைவியுடன் துபாய்க்கு சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த லுக்-அவுட் நோட்டீஸை திரும்ப பெறக் கோரி ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பண மோசடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. வரும் டிச.10 -ம் தேதி துபாயில் இருந்து சென்னை வரவுள்ளதால் லுக்-அவுட் நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும்’ என கூறியிருந்தார். இந்நிலையில் ‘அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்தி  வைத்து’ நீதீமன்றம்  தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 10 தேதியான நேற்று  காலை துபாயில் இருந்து ஆர்கே சுரேஷ் சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்திலேயே குடியுரிமை அதிகாரிகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆருத்ரா வழக்கில் ஆஜர் ஆவதற்காக தான் துபாயில் இருந்து திரும்பி வந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் சுரேஷ் அளித்த உறுதியின் பதில் விமான நிலைய அதிகாரிகள் அவரை வீடு திரும்ப அனுமதி அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர் டிசம்பர் 12ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில்  ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Begam

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

33 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago