சூர்யாவுக்கு பயந்து நன்றி மறந்த த்ரிஷா… இப்படி ஒரு வேலை பண்ணிட்டாங்களே?.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் அமீர் இயக்கத்தில் சூரிய மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மௌனம் பேசியதே. இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தான் இயக்குனராக அறிமுகமான படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். பருத்திவீரன் விவகாரத்தில் என்னதான் சூர்யா மீது அவருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

   

இந்த நிலையில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கிடைத்த அழகு தேவதை திரிஷா 21 வருடங்கள் ஆகியும் அதே அழகுடன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினியாக நடித்து வருகின்றார். இவர் தனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆனால் அமீர் வெளியீட்டு அறிக்கையில் சூர்யா மற்றும் திரிஷா உள்ளிட்ட அனைவருக்குமே நன்றி தெரிவித்து குறிப்பிட்டிருந்தார். இப்படி இருக்க திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமீர் பெயரை குறிப்பிடவில்லை.

மற்ற அனைவரது பெயரையும் குறிப்பிட்டுள்ள திரிஷா ஏன் அமீர் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியான நடிகையாக இருக்கும் திரிஷா அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அதனாலயே சூர்யாவுக்கு சாதகமாக அமீர் பெயரை இவர் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Trish இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@trishakrishnan)

author avatar
Nanthini