சென்னை பூவிருந்தவல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றபோது இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூவிருந்த பள்ளி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த பழனி (50) என்பவருடைய மகன் நிர்மல் (19). இவருக்கு அவருடைய பெற்றோர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்று வர புதிய பைக் வாங்கி கொடுத்துள்ளனர். இதனிடையே அதிவேகமாக செல்லும் அந்த டியூக் பைக் எளிதாக 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் நிர்மல் குமார் அவருடைய டிப்ளமோ படிக்கும் நண்பர் சந்தோஷ் ஆகிய இருவரும் தனியார் கம்பெனியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளனர்.
இன்று காலை இருவரும் அவருடைய புது பைக்கில் டீ குடிப்பதற்காக சென்றபோது சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சாலையில் நின்று கொண்டிருந்த கறிக்கோழி ஏற்றி வந்த லோடு வேன் மீது பைக் அதிவேகமாக மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோர் ஆசையாக வாங்கிக் கொடுத்த பைக்கில் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…