ஆந்திரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த இரண்டு வருடங்களாக 14 பேர் கொண்ட கும்பலால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அச்சிறுமி 8-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதிலிருந்தே இந்த கொடூரம் அரங்கேறி வந்துள்ளது. அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வெளியில் சொல்ல முடியாமல் பள்ளிக்குச் சென்று வந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி தகவலை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு நேர்ந்த கொடூரங்களையும், அதற்கு காரணமான நபர்கள் குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட 14 நபர்களையும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…