போர்நிறுத்தத்திலும் ஓயாத துப்பாக்கி சத்தம்…! “பசியில் வாடிய 13 வயது சிறுவனை…” காசாவில் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 11 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!

Spread the love

காசாவில் அக்டோபர் 10 முதல் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் எகிப்து எல்லை அருகே அகதிகள் முகாமைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாகனத்தை இஸ்ரேல் தாக்கியதில் மூன்று பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டாலும், இந்தப் போர்நிறுத்தக் காலத்தில் மட்டும் இதுவரை 470-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு தாக்குதலில், உணவு தேடி விறகு சேகரிக்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசாவுக்குள் வரும் மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் கடும் நெருக்கடி கொடுத்து வருவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தவித்து வருகின்றனர். பசி மற்றும் வறுமைக்கிடையே பிழைக்கத் துடிக்கும் அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தொடர் வன்முறைகள், ஏற்கனவே சிதைந்துள்ள காசாவின் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகின்றன.

Devi Ramu

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

44 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

49 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

53 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

56 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago