டெல்லி சாஹர்பூர் பகுதியை சேர்ந்த 40 வயது கூலி தொழிலாளிக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில் தனது நான்கு பிள்ளைகளையும் தொழிலாளி தான் கவனித்து வந்துள்ளார். இப்படியான நிலையில் அந்த தொழிலாளியின் பத்து வயது மகன் நேற்று அந்தப் பகுதியில் பெய்த மழையில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். உடனே தன் தந்தையிடம் இதை கூறிய நிலையில் மழையில் நனைய கூடாது என்று தந்தை மகனை கண்டித்துள்ளார்.
ஆனால் தன் தந்தையின் பேச்சை கேட்காமல் கொட்டும் மழையில் விளையாட ஆசைப்பட்ட சிறுவன் மிகவும் அடம் பிடித்துள்ளான். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பெற்ற மகன் என்றும் பாராமல் சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை வீட்டாக்கப் பக்கத்தினர் உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு அடைத்துச் சென்ற நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகனை கத்தியால் குத்திய தந்தையை கைது செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…