தமிழகத்தில் பெற்றோரின் அலட்சியத்தால் பள்ளி மாணவி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் அட்சயா, அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி ப்ரியம் கொண்ட அட்சயா தனது தந்தையின் வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அட்சயா கடைக்கு செல்வதற்காக பிற்பகல் வீட்டில் இருந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லொறி ஒன்று, எதிர்பாரத விதமாக அட்சயா வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லொறி ஓட்டுநர் சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம் ஓட்ட 18 வயது ஆக வேண்டும் என்ற நிலையில் அதை மீறி அக்சயா ஓட்டியிருக்கிறார். இதை கண்டிக்காமல் அவர் பெற்றோர் ஊக்கமளித்து அலட்சியம் காட்டியதால் வாழவேண்டிய சிறுமி இன்று உலகில் இல்லாமல் போயுள்ளார்.
பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…
சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை காயத்ரி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில்…
கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும்…
உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள்…
அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக…