Categories: NEWS

திருமணத்திற்கு பெண்கள் இல்லை! 100 பெண்களுக்கு 113 ஆண்கள்..! அல்லல்படும் பிரபல நாடு..!

சீனாவில் திருமணத்திற்கான பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருமணம் ஆகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சீனா தான், ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இந்த முதல் இடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சீனாவில் திருமணம் ஆகாமல் 3 கோடி ஆண்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஆண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக விருப்பம் காட்டுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக சீனாவில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்திருந்தாலும், பாலின இடைவெளி இன்னும் அதிகமாகவே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இது ஒரு நீண்ட கால பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும், சீனா வெளியிட்டுள்ள தகவல்படி, ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 113.5 ஆண்கள் இருக்கின்றனர். இதன் விளைவாக, திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு 1.2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 6 லட்சம் ஆண் குழந்தைகள் திருமண வயதை எட்டியபின் பெண் கிடைக்காது என நிபுணர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Archana
Archana

Recent Posts

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார்.…

14 mins ago

“என்னால் விஜய்க்கு படம் பண்ண முடியாது… அவரோட அந்த ஒரு கண்டீஷன் எனக்கு செட் ஆகாது” – சுந்தர் சி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

27 mins ago

பல கோடி மதிப்புள்ள வீடு, சொகுசு கார்.. 5 கோடி சம்பளம்.. சவுத் குயின் த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

சவுத் இந்தியன் குயினாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவர் இன்று தன்னுடைய 41 வது பிறந்த நாளை கொண்டாடி…

42 mins ago

“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன்…

1 hour ago

மீண்டும் இணையும் ‘ஜோ’ ஜோடி.. ரியோ ராஜ்க்கு குவியும் வாய்ப்பு.. இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ரியோவுக்கு ஜோ திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இப்படத்தின்…

1 hour ago

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

3 hours ago