தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ் குமார் (26) ஆகியோருடன் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீனாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மீனா கடந்த மாதம் 16-ந் திகதி சிகிச்சை பலனின்றி இ.றந்தார்.
இதனைத் தொடர்ந்து மீனாவின் இறுதிச் சடங்குகள் அங்கேயே நடந்தது. இந்நிலையில் தன் மனைவியின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைக்க முடிவு செய்தார் கனகராஜ்.
இதன் காரணமாக மனைவி மீனாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மகனுடன் தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு விரைந்தார்.
மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டு கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது. பின்னர் மீனா இறந்த வேதனை கனகராஜனையும், மனோஜ்குமாரையும் வாட்டி எடுத்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜன் அவரது மகன் மனோஜ் குமார் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தனி அறையில் ச.ட.ல.மா.க கி.டந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் ச.டலமாக கிடந்த இருவரது உ.டல்களையும் மீ.ட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட கனகராஜன் தங்கி இருந்து அறையில் ஒரு கடிதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை.
மீனா சென்ற இடத்திற்கே நாங்களும் செல்கிறோம் என்று கனகராஜன் கைப்பட எழுதி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…