மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க வேண்டும் என்பதற்காக பல தலைப்புகளில் கட்டுரை எழுத வைக்கப்படுவது வழக்கம். அவை மாணவர்களின் அறிவு மற்றும் புரிதல் திறனை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். கட்டுரை தலைப்பு கொடுக்கப்படும் போது ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும் என்று நாம் குறிப்பிட்டு இருப்போம். அப்படி ஒரு கட்டுரையில் மாணவன் எழுதியுள்ளது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
அந்த கட்டுரையில் திருமணம் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த மாணவன் எழுதியுள்ளதாவது” திருமணம் என்பது என்னவென்றால் ஒரு பெண்ணின் பெற்றோர் இப்போது நீ பெரிய பெண்ணாகி விட்டாய், இதனால் உனக்கு எங்களால் சாப்பாடு போட முடியாது.
உனக்கு உணவளிக்கும் சிறந்த ஆணை நீ கண்டுபிடி என்று கூறுகிறார்கள். அதன் பின்னர் அந்த பெண் ஒரு ஆணை கண்டுபிடிக்கிறார்.
அந்த ஆணின் பெற்றோர் அவனிடம் நீ பெரிய பையனாக ஆகிவிட்டாய். இதனால் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அதன் பின் இருவரும் தங்களை சந்தித்துக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள் .பிறகு ஒன்றாக வாழ சம்மதித்து குழந்தை பெற்றுக் கொள்ள முட்டாள்தனமான செயல்களை செய்ய தொடங்குகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதை படித்த அந்த ஆசிரியர் அவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களை அழைத்து முட்டாள்தனம் என்றும் கட்டுரையின் மீது குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…