Categories: NEWS

கணவன் மர ணம டைந்த சில மணி நேரத்தில் உ யிரி ழந்த ம னைவி : அ னா தை யான 3 பிள்ளைகளின் அ வல நிலை..!

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அடுத்தடுத்து உ.யிரிழந்த நிலையில் அவர்களின் 3 பிள்ளைகள் அனாதையாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்தநிலையில் பிச்சாண்டியின் மனைவி செல்விக்கு (46) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பிச்சாண்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வியும், கணவர் பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த பிச்சாண்டி- செல்வி தம்பதிக்கு அகிலா (23) என்ற மகளும், வசந்தகுமார் (22), விமல் (20) ஆகிய 2 மகன்களும் உள்ள நிலையில் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archana
Archana

Recent Posts

“அது மட்டும் வொர்க் ஆகலன்னா நான் வாழ்க்க முழுக்க பெட்லதான் இருக்கணும்…” சுந்தர் சி யிடம் அஜித் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

30 seconds ago

“காதல் கோட்டை” பாடாய் படுத்திய தங்கர் பச்சன்…. உண்மையை சொன்ன தேவயானி….!!

1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அஜித், தேவயானி நடித்த இந்த படத்தில் கரண்…

18 mins ago

“சங்கரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டேனோ” பயந்துபோன கேஎஸ் ரவிக்குமார்…. திருப்புமுனையாக அமைந்த வெற்றி படம்….!!

2008 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தசாவதாரம். கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருப்பார்.…

1 hour ago

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

13 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

13 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

14 hours ago