தொலைக்காட்சியில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் பிரபலம் ஆகா உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் உள்ள நிகழ்ச்சி தான் பிக் பாஸ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஆம் முதலில் அமீர் மற்றும் நேற்று சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்நிகழ்ச்சியை வாரம் தோறும் தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமலுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக யார் இனி வரும் வாரங்களில் தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.