கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லையா..? மத கோஷங்கள் எழுப்ப சொல்லி கட்டாயப்படுத்தி… இளைஞரை கொடூரமாக தாக்கும் கும்பல்…!!

Spread the love
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டம் ராஜ்நகர் காவல் எல்லைக்குட்பட்ட சக்தா கிராமத்தில், மனிதாபிமானமற்ற முறையில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான அந்த இளைஞரை வழிமறித்த ஒரு கும்பல், அவரை மத ரீதியிலான கோஷங்களை எழுப்புமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தடி மற்றும் கைகளால் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரைப் “பாகிஸ்தானியர்” மற்றும் “வங்காளதேசியர்” என்று முத்திரை குத்தி அவமானப்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் மதுபனியின் பாரம்பரியமிக்க சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பொதுமக்களிடையே கவலை எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ள நிலையில், இது போன்ற வெறுப்புச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க சட்டம் ஒழுங்கு பலப்படுத்தப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Soundarya

Recent Posts

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

12 seconds ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

4 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

11 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

15 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

19 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

21 minutes ago