திருநெல்வேலி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் வசித்து வரும் மத போதகர் ஜேம்ஸ் பால் என்பவருடைய மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் மதுரையில் படித்து வரும் நிலையில் நேற்று ஜேம்ஸ் அவருடைய மனைவி குடும்பத்துடன் தனது மகளை பார்ப்பதற்காக மதுரைக்குச் சென்ற போது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். வீடு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அந்த வீட்டுக்குள் புகுந்து அதிக மதிப்புள்ள பொருட்கள் மற்றும் தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணம் இருந்தால் அனைத்தையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து யாரும் இல்லாத நேரம் பார்த்து நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து அவர் உள்ளே சென்றுள்ளார். திருட வந்த மர்ம நபர் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்தார்.
அதாவது வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் கடுமையாகத் தேடியும் நகை மற்றும் பணம் எதுமே இல்லை. இதனால் விரத்தியடைந்த அவர் வீட்டில் இருந்த சுவற்றில், திருட வரும் திருடனுக்கு கொஞ்சம் காசு வச்சிட்டு போங்க, வீட்ல காசு இல்ல அப்புறம் எதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா, இனி என்னைப் போன்று திருட வரும் திருடனுக்கு கொஞ்சமாவது காசு வைத்துவிட்டு செல்லுங்கள், இப்படிக்கு திருடன் என்று எழுதி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரையிலிருந்து வீடு திரும்பிய ஜேம்ஸ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது சுவற்றில் எழுதப்பட்டிருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…