கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா ஜோதிகா, பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர்.
‘காக்க காக்க’ திரைப்படத்தில் இணைந்த நடித்த போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டிலும் சம்மதம் கூற 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தியா கிட்டத்தட்ட 487 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா டெல்லிக்குச் சென்றுள்ளார். இவ்விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யாவிற்கு ‘சிறந்த நடிகருக்கான விருது’ வழங்கப்படுகிறது. விமான நிலையத்தில் தனது மனைவி, மகன், மகளுடன் இருக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர் சூர்யாவின் மகளா? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…..
சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…
கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…