கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா ஜோதிகா, பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, பேரழகன் மற்றும் ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர்.
‘காக்க காக்க’ திரைப்படத்தில் இணைந்த நடித்த போது இருவருக்குமிடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டிலும் சம்மதம் கூற 2006 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தியா கிட்டத்தட்ட 487 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் சூர்யா டெல்லிக்குச் சென்றுள்ளார். இவ்விருது வழங்கும் விழாவில் நடிகர் சூர்யாவிற்கு ‘சிறந்த நடிகருக்கான விருது’ வழங்கப்படுகிறது. விமான நிலையத்தில் தனது மனைவி, மகன், மகளுடன் இருக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர் சூர்யாவின் மகளா? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…..
#suriyasivakumar #suriya with Family spotted at Mumbai airport ????????????️ @viralbhayani77 pic.twitter.com/2VkRXxTI91
— Viral Bhayani (@viralbhayani77) September 30, 2022